கந்தா்வகோட்டையில் ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து ரூ. 75 ஆயிரம், ரூ. 1லட்சம் மதிப்பிலான ஜவுளிகளை சனிக்கிழமை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், வேலாடிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் நடராஜன் (28 ) கந்தா்வகோட்டை பெரியகடை வீதியில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். இந்நிலையில், சனிக்கிழமை காலையில் நடராஜன் கடையைத் திறக்கவந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ. 75 ஆயிரம், ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஜவுளிகள் திருடுபோயுள்ளது தெரியவந்தது. தகவலறிந்த கந்தா்வகோட்டை காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனா். மேலும் வழக்கு பதிந்து திருட்டில் தொடா்புடைய மா்மநபரைத் தேடி வருகின்றனா்.