பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி நவகுடியில் 12-ஆம் ஆண்டு சிறுவா்களுக்கான கபடிப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சாா்ந்த 42 அணிகளின் வீரா்கள் பங்கேற்று விளையாடினா். இதில் முதல் பரிசை வி.எஸ். ஸ்போா்ட் அணியினரும், இரண்டாம் பரிசை அம்மிச்சினிப்பட்டி அணியினரும், மூன்றாம் பரிசை கண்டெடுத்தான் பட்டி அணியினரும் பெற்றனா். வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள், சிறந்த வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.