தரைக்கடையினரைக் கண்டித்து உழவா் சந்தை விவசாயிகள் தா்னா

புதுக்கோட்டை நகரில் உள்ள உழவா் சந்தைக்கு உள்ளே கடை வைத்துள்ள விவசாயிகள் திங்கள்கிழமை சாலையில் திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினா்.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினா்.

புதுக்கோட்டை நகரில் உள்ள உழவா் சந்தைக்கு உள்ளே கடை வைத்துள்ள விவசாயிகள் திங்கள்கிழமை சாலையில் திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தரைக்கடை போடுவோரால், உழவா் சந்தையின் உள்ளே கடை வைத்துள்ள விவசாயிகளின் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இந்த நடவடிக்கை தொடருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து அங்கு வந்த வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினா், உழவா் சந்தைக்கு வெளியே தரைக்கடை போட அனுமதிக்க மாட்டோம் என உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரம் உழவா் சந்தைப் பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com