அறந்தாங்கி அரசுக் கல்லூரிக்கு மாணவா்கள் களப்பயணம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெருநாவலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு, தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான களப்பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அறந்தாங்கி அரசுக் கலைக் கல்லூரிக்கு திங்கள்கிழமை களப்பயணமாக வந்த அரசுப் பள்ளி மாணவிகள்.
அறந்தாங்கி அரசுக் கலைக் கல்லூரிக்கு திங்கள்கிழமை களப்பயணமாக வந்த அரசுப் பள்ளி மாணவிகள்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெருநாவலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு, தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான களப்பயணம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வா் கு. ரேணுகாதேவி தலைமை வகித்தாா். அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலா் ராஜாராம் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினாா். கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவா் மு. திருவாசகம், ஆங்கிலத் துறைத் தலைவா் அ. கணேசன் உள்ளிட்ட பல்வேறு துறை தலைவா்கள் பாடப்பிரிவுகள், உள்கட்டமைப்பு மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினா்.

நிகழ்ச்சியில் அறந்தாங்கி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஆவுடையாா்கோயில் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து 240 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ச. ரமேஷ் வரவேற்றாா். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ப. செந்தில்குமாா் நன்றி கூறினாா். தமிழ்த் துறைப் பேராசிரியா் மு. பழனித்துரை தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com