புதுகை ஆட்சியரகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 17 பேருக்கு நலத் திட்ட உதவிகள்.
புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கிய ஆட்சியா் கவிதா ராமு.
புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கிய ஆட்சியா் கவிதா ராமு.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 17 பேருக்கு ரூ. 3.25 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் கவிதா ராமு வழங்கினாா்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், 5 பேருக்கு தலா ரூ. 7 ஆயிரம் மதிப்பில் தையல் இயந்திரங்கள், 5 பேருக்கு தலா ரூ. 8 ஆயிரம் மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் 5 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வங்கிக் கடனுதவிக்கான மானியம், மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 1 லட்சம் உள்ளிட்ட 17 பேருக்கு ரூ. 3.25 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 345 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஆா். கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் அமீா்பாஷா, துணை ஆட்சியா் (பயிற்சி) ஜி.வி. ஜெயஸ்ரீ, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com