சமத்துவப் பொங்கல் விழா

புதுக்கோட்டை கற்பக விநாயகா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏழு பானைகளில் வைக்கப்பட்ட பொங்கல்.
புதுக்கோட்டை கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏழு பானைகளில் வைக்கப்பட்ட பொங்கல்.

புதுக்கோட்டை கற்பக விநாயகா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

அன்பு, பண்பு, கல்வி, ஒழுக்கம், பொறுமை, நம்பிக்கை, ஆளுமை ஆகிய 7 நற்பண்புகளைக் குறிக்கும் வகையில் 7 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், பள்ளி செயலா் என். சுப்பிரமணியன், கல்விக் குழும அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன், பள்ளியின் தலைமை ஆசிரியா் இ. ஷானுரேஸ்வான், கல்வி ஒருங்கிணைப்பாளா் எஸ். ஜெயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com