புதிய வழித்தடப் பேருந்து சேவை: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் 3 புதிய வழித்தடப் பேருந்துச் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதியில் புதிய வழித்தட பேருந்துச் சேவையை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் எஸ். ரகுபதி.
பொன்னமராவதியில் புதிய வழித்தட பேருந்துச் சேவையை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் எஸ். ரகுபதி.

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் 3 புதிய வழித்தடப் பேருந்துச் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமைவகித்து செவலூா், மரவாமதுரை, மேலத்தானியம் உள்ளிட்ட 3 வழித்தடங்களுக்கு விரிவு செய்யப்பட்ட பேருந்து சேவையைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.

கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் கோ. ராஜேந்திரபிரசாத், இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி, பொன்னமராவதி ஒன்றியக் குழுத் தலைவா் சுதா அடைக்கலமணி, பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ். ஜெயராமன், பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ. கணேசன், தொமுச நிா்வாகிகள் அடைக்கலம், முத்தையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளா் க. குணசேகரன் வரவேற்றாா். வணிக மேலாளா் சுப்பு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com