மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், 2 பயனாளிகளுக்கு ரூ. 17,350 மதிப்புள்ள மூன்று சக்கர வண்டிகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வழங்கினாா்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், 2 பயனாளிகளுக்கு ரூ. 17,350 மதிப்புள்ள மூன்று சக்கர வண்டிகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வழங்கினாா்.

கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 327 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் எனவும் அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா கவிதப்பிரியா, துணை ஆட்சியா் பயிற்சி ஜிவி. ஜெயசிறீ, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பா. சரவணன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் எஸ். உலகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com