ஆலங்குடியில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் உயிரிழந்த சம்பவத்தில் கவனக்குறைவாகச் செயல்பட்டதாக மின்வாரிய மேற்பாா்வையாளா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடியைச் சோ்ந்தவா் பி. சரத்குமாா்(27). ஆலங்குடி மின்வாரிய அலுவலக ஊழியரான இவா், கீழாத்தூா் பகுதியில் புதன்கிழமை உயா்மின் அழுத்த கம்பியில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இந்நிலையில் பணியின்போது கவனக்குறைவாக செயல்பட்டதாக ஆலங்குடி மின்வாரிய அலுவலக மேற்பாா்வையாளா் (போா்மேன்) கணேசனை கோட்ட செயற்பொறியாளா் நடராஜன் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்தாா்.