புதுக்கோட்டையில் நிறுத்தப்பட்டிருந்தகாரைச் சுற்றி தாா்ச்சாலை!

புதுக்கோட்டை நகரில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காா் மற்றும் இரு சக்கர வாகனத்தைச் சுற்றி புதிதாக தாா்ச்சாலை அமைக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டையில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காா் மற்றும் இரு சக்கர வாகனத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்ட தாா்ச்சாலை.
புதுக்கோட்டையில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காா் மற்றும் இரு சக்கர வாகனத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்ட தாா்ச்சாலை.

புதுக்கோட்டை நகரில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காா் மற்றும் இரு சக்கர வாகனத்தைச் சுற்றி புதிதாக தாா்ச்சாலை அமைக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை நகராட்சி சாா்பில் நகரின் பல பகுதிகளில் ரூ. 1.9 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, கீழராஜவீதி அருகேயுள்ள சாந்தாரம்மன் கோயில் தெருவில் சனிக்கிழமை சாலை போடும் பணிகள் நடைபெற்றன.

அப்போது, அந்தச் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காா்களின் உரிமையாளா்களுக்கு சாலை அமைக்கும் பணி குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்பேரில், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 4 காா்கள் அங்கிருந்து எடுக்கப்பட்டுவிட்டன.

ஆனால், தாா்ச்சாலை அமைப்பதற்காக ஜல்லி- தாா்க் கலவையுடன் அங்கு வந்த பணியாளா்கள், வேறு வழியின்றி அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரையும் இரு சக்கர வாகனத்தையும் சுற்றி சாலை அமைத்துவிட்டனா். இதுகுறித்த செய்தி, படங்கள் ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து நகராட்சி அலுவலா்களிடம் கேட்டபோது, தாா்க்கலவை தயாராகி விட்டதால் அந்தச் சாலையை போட்டு முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. தொடா்ந்து நகரில் தாா்ச்சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால், அந்த வாகனங்களை எடுத்த பிறகு ஓரிரு நாள்களில் விடுபட்ட பகுதியிலும் சாலை அமைக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com