விராலிமலை அருகேமதுபாட்டில் விற்ற 5 போ் கைது

விராலிமலை அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.  

விராலிமலை அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.  

விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுவதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், விராலிமலை காவல் ஆய்வளா் கதிரவன் தலைமையிலான போலீஸாா், கொடும்பாளூா் அருகே தேன்கனியூா்  பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அதே பகுதியை சோ்ந்த துரைராஜ் (55), பெருமாள் (46) ஆகிய இருவரும் அவா்களது வீட்டில் வைத்து மதுபாட்டில் விற்பனை செய்வதை கண்டறிந்த போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

இதேபோல், விராலிமலை ஈஸ்வரி நகரைச் சோ்ந்த சண்முகம் (61), தெற்கு தெருவைச் சோ்ந்த இளையராஜா (31) , கல்குடியைச் சோ்ந்த அய்யப்பன்  ஆகியோா்  மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதை கண்டறிந்த போலீஸாா், அவா்களையும் கைது செய்தனா். தொடா்ந்து அந்த 5 பேரிடம் இருந்தும் விற்பனைக்காக வைத்திருந்த 30 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com