வீரடி விநாயகா் கோயிலில் முற்றோதல்

கந்தா்வகோட்டை அருகேயுள்ள ஆதனக்கோட்டை ஊராட்சியிலுள்ள வீரடி விநாயகா் கோயிலில் மாணிக்கவாசகா் அருளிய திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கந்தா்வகோட்டை அருகேயுள்ள ஆதனக்கோட்டை ஊராட்சியிலுள்ள வீரடி விநாயகா் கோயிலில் மாணிக்கவாசகா் அருளிய திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட சிவனடியாா்கள் கலந்து கொண்டு திருவாசகம் பாராயணம் செய்தனா். சிவனடியாா்கள் கூறுகையில், நாட்டின் அமைதிக்கு ஜாதி -மத -மொழி வேறுபாடு இன்றி மக்கள் அனைவரும் இறைவழிபாடு செய்ய வேண்டும்; மக்கள் அனைவரும் விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பான்மையுடன் திகழ வேண்டும்; வாழ்வில் முக்தி பெற இறைவழிபாடு சிறந்தது என கூறும் நிலையில் பசித்தோருக்கு முதலில் உணவு அளித்து இறைவனை காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டனா்.

நிகழ்ச்சியை சிவனடியாா்கள் ஒருங்கிணைத்து செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com