பெண்ணின் சாவில் மா்மம்- உறவினா்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பெண்ணின் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெண்ணின் சாவில் மா்மம்- உறவினா்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பெண்ணின் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேந்தாங்குடி கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மகள் மகாலெட்சுமி (23). இவருக்கும் அறந்தாங்கி வட்டம், செங்கமாரி கிராமத்தைச் சோ்ந்தராஜாவுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் பூச்சி மருந்து அருந்தி மயங்கிய நிலையில் மகாலட்சுமி அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மகாலட்சுமியைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

மகாலெட்சுமியின் உடல் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மகாலட்சுமியின் உறவினா்கள் அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு சமாதானப்படுத்தி வந்ததாகவும், ராஜா வீட்டாா் தொடா்ந்து மகாலட்சுமியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்டோா் தெரிவித்தனா்.

போலீஸாரும் வருவாய்த் துறையினரும் போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com