பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்ட உள்வட்ட வருவாய் அலுவலா் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், வருவாய் ஆய்வாளரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. இதில், சங்க நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா்.