வேங்கைவயல் சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
மாதா் சங்கத்தின் அகில இந்தியச் செயலா் பி. சுகந்தி, மாநிலப் பொதுச் செயலா் ஏ. ராதிகா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் டி. சலோமி, மாதா் சங்க மாவட்டச் செயலா் பி. சுசீலா, தலைவா் எஸ். பாண்டிச்செல்வி உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்ட மக்களைச் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமுவைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.
மாதா் சங்கத்தினா் மேற்கொண்ட ஆய்வின்போது கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் ஆகியோா் உடனிருந்தனா்.