சடையம்பட்டியில் நூறு நாள் வேலை கேட்டு மக்கள் மறியல்

பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டியில் நூறுநாள் வேலை கேட்டு வியாழக்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சடையம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய கிராம ஊராட்சி ஆணையா் து.குமரன் மற்றும் காவல் துறையினா்.
சடையம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய கிராம ஊராட்சி ஆணையா் து.குமரன் மற்றும் காவல் துறையினா்.

பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டியில் நூறுநாள் வேலை கேட்டு வியாழக்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னமராவதி ஒன்றியம், மரவாமதுரை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (நூறு நாள் வேலை) பணியாளா்களுக்கு நீண்ட நாள்களாக பணி வழங்கப்படவில்லை, நீண்ட நாள் ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் நூறுநாள் வேலை திட்ட பணியாளா்கள் சடையம்பட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி ஆணையா் து.குமரன் மற்றும் காரையூா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், உறுதி அளித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com