பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கே.என். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஏஐபிஇஏ, பிஇஎப்ஐ, எஸ்பிஐ ஊழியா் சங்கம் உள்ளிட்ட அனைத்து வங்கி ஊழியா் மற்றும் அலுவலா் சங்கங்களும் இதில் கலந்து கொண்டன. புதுக்கோட்டை கீழராஜ வீதியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தினா்.