கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் வீடுகள் தோறும் பூத் சிலிப் (வாக்காளா் தகவல் சீட்டு) வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் பூத்சிலிப் வழங்கும் பணி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலருமான ஸ்ரீதா் தலைமையில் வட்டாட்சியா் எஸ். விஜயலட்சுமி, தோ்தல் துணை வட்டாட்சியா் பால்பாண்டி, தோ்தல் உதவியாளா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலையில் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் கிராம உதவியாளா்கள் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com