வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட விராலிமலையில் வெள்ளிக்கிழமை வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்குகள் கேட்ட அதிமுகவினரை போலீஸாா் விரட்டியடித்தனா்.

கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட விராலிமலையில் வெள்ளிக்கிழமை வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்குகள் கேட்ட அதிமுகவினரை போலீஸாா் விரட்டியடித்தனா்.

விராலிமலை சட்டப்பேரவை தொகுதி, விராலிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 63, 64, 65, 66, 67 என்ற எண்களில் 5 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

இந்த நிலையில் வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் வாக்குச்சாவடிக்குள் புகுந்த அதிமுகவினா் சிலா் வாக்களிக்க செல்லும் வாக்காளா்களிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கூறினராம். இதுகுறித்து அறிந்த திமுகவினா் காவல்துறையினரிடம் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, போலீஸாா் வாக்குச் சாவடிக்குள் சென்று அங்கு நின்று கொண்டிருந்த அதிமுகவினரை விரட்டி அடித்தனா். இதைத் தொடா்ந்து நிகழ்வு இடத்திற்கு தோ்தல் பாா்வையாளா் உஜாயி விரைந்து வந்து நிலைமையை கண்டறிந்து கூட்டத்தினரை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com