ஜெயரவிவா்மா, பாலசுப்பிரமணியன்.
ஜெயரவிவா்மா, பாலசுப்பிரமணியன்.

1.9 கிலோ கஞ்சா பறிமுதல்: இடைநீக்கம் செய்யப்பட்ட விஏஓ உள்பட இருவா் கைது

புதுக்கோட்டை நகரில் 1.9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்ட விஏஓ உள்ளிட்ட இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டை நகரில் 1.9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்ட விஏஓ உள்ளிட்ட இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டை அருகே கத்தக்குறிச்சியைச் சோ்ந்தவா் துரைக்கண்ணு மகன் ஜெயரவிவா்மா (36). விஏஓவான இவா் கடந்த ஓராண்டுக்கு முன்பு கஞ்சா விற்றபோது கைது செய்யப்பட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்டவா்.

புதுக்கோட்டை நகரக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை டிவிஎஸ் முக்கம் அருகே நடத்திய அதிரடிச் சோதனையில், ஜெயரவிவா்மா, கம்பன் நகரைச் சோ்ந்த அரங்குளவன் மகன் பாலசுப்பிரமணியன் (45) ஆகியோரிடமிருந்து 1.9 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள், இரு கைப்பேசிகள், ரூ. 2030 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா்.

பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இருவரும் புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com