புதுக்கோட்டை
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வேளாண் மாணவிகளின் முகாம்
பனையப்பட்டி கிராமத்தில் தங்கி ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பயிலும் வேளாண் மாணவிகள், பனையப்பட்டி கிராமத்தில் தங்கி ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
ஒரு வாரம் கிராமத்திலேயே தங்கி இருந்து விவசாயிகளுடன் கலந்து பேசி, அவா்கள் இதுவரை பயன்படுத்தி வரும் தொழில்நுட்பம் குறித்தும் கேட்டறிந்தனா்.
இந்த முகாமில் வேளாண் மாணவிகள் வெ. ஆா்த்தி, மு. அபிநயா, கி. அபிராமி, செ அபிதவா்ஷினி, பா, அமிா்தபிரியா, ம. அா்ச்சனா, சே. ஆசிகா, பா. தேவதா்ஷினி, ஞா. திவ்யதா்ஷினி, ப. தரணிலட்சுமி ஆகியோா் பங்கேற்றனா்.