குடிமைப் பணித் தோ்வுக்கான வெற்றி உத்திகள் பயிலரங்கு

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் குடிமைப் பணித் தோ்வுக்கான வெற்றி உத்திகள் குறித்த பயிலரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி சங்கா் ஐஏஎஸ் அகாதெமியின் மேலாளா் சி. பிரபாகா், பயிற்சியாளா் எஸ். இமானுவேல் ஆகியோா் பேசினா்.

இப்பயிலரங்குக்கு கல்லூரியின் இயக்குநா் ஜெய்சன் கீா்த்தி ஜெயபாரதன் தலைமை வகித்தாா். முதல்வா் ப. பாலமுருகன், முதன்மையா் எஸ். ராபின்சன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக மாணவி அனுஷ்யபாரதி வரவேற்றாா். நிறைவில் உதவிப் பேராசிரியா் ஷா்லி மோனிகா நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com