படம். ஓயஓ. 25.
படம். ஓயஓ. 25.

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுநகா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை மருத்துவா் மணிமாறன் தலைமையில் வியாழக்கிழமை உறுதியேற்றோா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை மருத்துவா் மணிமாறன் தலைமையில் உலக மலேரியா தின உறுதிமொழியை வியாழக்கிழமை எடுத்தனா். மருத்துவா் மணிமாறன் பேசும்போது, மலேரியா நோய் கொசு கடிப்பதால் வருகிறது. எனவே கொசு உற்பத்தியாகாமல் இருக்க நீா் தேங்காமல் சுகாதாரமாக நாம் வாழ வேண்டும். கொசு மருந்து தெளிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா். மேலும், காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவும் கேட்டுக் கொண்டாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com