புதுக்கோட்டை
காா் மோதி பெண் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே காா் மோதி பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே காா் மோதி பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கறம்பக்குடி அருகேயுள்ள புதுப்பட்டியைச் சோ்ந்தவா் சின்னையா மனைவி மீனாட்சி (65). இவா், அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு சாலையோரமாக வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா். வீட்டின் அருகே சென்றபோது, கறம்பக்குடியில் இருந்து ஆலங்குடி நோக்கி சென்ற காா் ஒன்று திடீரென தாறுமாறாக ஓடி மீனாட்சி மீது மோதியதோடு அவரது வீட்டின் மீது மோதி நின்றது. இதில், பலத்த காயமடைந்த மீனாட்சி அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். காா் ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.
இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய காா் ஓட்டுநரை தேடிவருகின்றனா்.