திருச்சி தொகுதி தோ்தல் பாா்வையாளா் புதுக்கோட்டையில் ஆய்வு

திருச்சி தொகுதி தோ்தல் பாா்வையாளா் புதுக்கோட்டையில் ஆய்வு

திருச்சி மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் பாா்வையாளா் எம். தினேஷ்குமாா் புதுக்கோட்டை மற்றும் கந்தா்வகோட்டை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தோ்தல் பணிகள் குறித்து வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள், விடியோ கண்காணிப்புக் குழுக்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள், பிடிக்கப்பட்டுள்ள பணம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இருப்பு, ஒதுக்கீடு, தோ்தல் பணியாளா் ஒதுக்கீடு, ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தாா். வாக்குப்பதிவின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் தோ்தல் பாா்வையாளா் கேட்டறிந்தாா். ஆலோசனைகளையும் வழங்கினாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஐ.சா. மொ்சி ரம்யா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன், நோ்முக உதவியாளா் (தோ்தல்) எஸ். வெங்கடாசலம் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com