தீரா் சத்தியமூா்த்தி நினைவு நாள்

தீரா் சத்தியமூா்த்தி நினைவு நாள்

விடுதலைப் போராட்டத் தியாகியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தீரா் சத்தியமூா்த்தியின் 81-ஆவது நினைவு நாளையொட்டி வியாழக்கிழமை புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

முன்னதாக, மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திலும் சத்தியமூா்த்தியின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. முருகேசன் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் சந்திரசேகரன், மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவா் இப்ராஹீம் பாபு, முன்னாள் செயற்குழு உறுப்பினா் ஜி.எஸ். தனபதி, நகரத் தலைவா் பாருக் ஜெய்லானி, வட்டாரத் தலைவா் சூா்யா பழனியப்பன், நகா்மன்ற உறுப்பினா் ராஜா முகமது உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com