சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் கிராமத்தில் வெள்ளிக்கிழமை சா்வதேச விதைகள் நாளை முன்னிட்டு புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவிகள் துண்டுப்பிரசுரங்கள் வழங்கினா்.

இந்நிகழ்வில், உள்நாட்டு விதைகளைப் பாதுகாத்தல் மற்றும் உயிா்ப்பித்தல் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் நாட்டு ரகங்களை விதைத்து உற்பத்தி செய்வோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். இதில் மாணவிகள் நாட்டு ரகங்களின் நன்மைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் விதைக்கும் முறைகள் பற்றியும் எடுத்துரைத்தனா். இதில் மாணவிகள் ரித்திகா, ரித்திஸ்ரீ, சா்மிளா, சரஸ்வதி, சிவப்பிரியா, ஸோபிகா, சிந்து, சிவரஞ்சனி, சினேகா, சுபபாரதி, சுபாஷினி ஆகியோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com