புதுக்கோட்டை
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
பொன்னமராவதி, மே 5: பொன்னமராவதி வட்டார சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் நந்திக்கு 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, வெள்ளி அங்கி சாத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதுபோல வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரா், திருக்களம்பூா் கதலிவனேஸ்வரா், மேலைச்சிவபுரி மீனாட்சி சொக்கநாதா், புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோக நாதா் உள்ளிட்ட கோயில்களில் வழிபாடு நடைபெற்றது. திரளான பொதுமக்கள் வழிபட்டனா்.