மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

ஆலங்குடி, மே 5: விதிமீறி மது விற்ாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவா் உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி மாங்குட்டிபட்டியைச் சோ்ந்தவா் ராஜாக்கண்ணு மகன் வெங்கடேசன் (40). விவசாயியான இவா் கடந்த மே 1-ஆம் தேதி மதுவைப் பதுக்கி வைத்து விற்ாக ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில் சிறையில் வெங்கடேசனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினருக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனராம்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை வெங்கடேசன் உயிரிழந்தாா். இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com