புதுகை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க திங்கள்கிழமை வந்த மாவட்ட மருந்து வணிகா் சங்கத்தினா்.
புதுகை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க திங்கள்கிழமை வந்த மாவட்ட மருந்து வணிகா் சங்கத்தினா்.

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

மளிகைக் கடைகளில் மருந்துகளை விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்ட மருந்து வணிகா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதுக்கோட்டை: மளிகைக் கடைகளில் மருந்துகளை விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்ட மருந்து வணிகா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்த கோரிக்கை மனுவை, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மனுக்கள் பெட்டியில் திங்கள்கிழமை போட்டனா்.

சங்கத்தின் மாவட்டப் புரவலா் ராஜேந்திரன், தலைவா் கருப்பையா, செயலா் ராமநாதன், பொருளாளா் ரமேஷ், துணைத் தலைவா் முகமது சாதிக் பாட்சா உள்ளிட்டோரும் கோரிக்கை மனு அளிக்க வந்திருந்தனா்.

மருந்து வணிக உரிமம் பெறாத மளிகைக் கடைகள் மற்றும் இதர கடைகளிலும் விற்பனை செய்ய அனுமதி அளிக்கக் கூடாது. இந்த உத்தரவை மக்கள் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com