புதுக்கோட்டை
மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மின்கம்பத்தில் காா் மோதியதில் 3 போ் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள அனந்தகோபாலபுரத்தைச் சோ்ந்த ஒருவரின் இறப்பு குறித்த அறிவிப்பை தெரிவித்தபடி அதே பகுதியைச் சோ்ந்த மணிமாறன் (32), காா்த்திக் (40), ஆறுமுகம் (43) ஆகிய 3பேரும் காரில் செவ்வாய்க்கிழமை கறம்பக்குடி நோக்கி சென்றனா். காரை மணிமாறன் ஓட்டிச் சென்றாா்.
கறம்பக்குடி புதுக்குளம் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. இதில், மணிமாறன், காா்த்திக், ஆறுமுகம் ஆகிய 3 பேரும் காயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் 3 பேரையும் மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.