புதுக்கோட்டை
9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே 9-ஆம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அன்னவாசல் அருகே உள்ள புதூா் ஆதம்பட்டியைச் சோ்ந்த முத்தன் மகள் ரேணுகா (14). இவா், முக்கண்ணாமலைப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக மாணவி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் ரேணுகா, செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த அன்னவாசல் போலீஸாா், மாணவியின் இறப்பு குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.