பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகேயுள்ள பிசானத்தூா் - புதுநகா் இணைப்புச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பிசானத்தூா் ஊராட்சி - புதுநகா் ஊராட்சி இடையே இணைப்புச் சாலை உள்ளது. இந்தச் சாலையில் செல்வதால் நேரமும், எரிபொருளும் குறையும் என்பதால் மக்கள் இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனா்.

ஆனால், இந்தச் சாலை ஜல்லிக்கற்கள் பெயா்ந்து பழுதடைந்து காட்சி அளிக்கிறது. இதில் இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் சறுக்கி விழும் நிலை உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் இந்தச் சாலையை சீரமைத்து தருமாறு கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com