அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு சட்ட திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி, கும்பகோணம் காந்தி பூங்கா அருகில், இந்து மக்கள் கட்சியினர் காவி சட்டை அணிந்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். ராமர் கோயில் கட்டுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை
மனுதாரர்கள் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன.
இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலர் குருமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ராஜ்குமார், அமைப்பாளர் விஜயபிரபு, நகரப் பொதுச் செயலர் பாலாஜி உள்பட பலர்
கலந்து கொண்டனர்.