தொடர் மழையால் அம்மாபேட்டை வருவாய் சரகப் பகுதியில் 11 வீடுகள் சேதமடைந்தன.
அம்மாபேட்டை வருவாய் சரகத்தில் மாணிக்கம், செல்வம், ரவி உள்பட 11 பேரின் வீடு இடிந்து பகுதி சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பாபநாசம் வட்டாட்சியர் வெங்கடாசலம், வருவாய்
அலுவலர் செல்வம் உள்ளிட்டோர் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர், சேத மதிப்புகளை ஆய்வு செய்தனர்.