பட்டுக்கோட்டை நகரம், தங்கவேல் நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
இதற்கான கூட்டத்தில் புதிய கிளையின் தலைவராக விவேக், செயலராக அஜித், பொருளாளராக வெற்றி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்துக்கு விவேக் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் குட்டி தொடக்கவுரையாற்றினார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முருக.சரவணன், வீ.சாமிநாதன், அகமது நசீர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியச் செயலர் மோரிஸ் அண்ணாதுரை நிறைவுரையாற்றினார். வெற்றி நன்றி கூறினார்.