பட்டுக்கோட்டையில் நடிகர் விஜய் 43-வது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் 43 பேர் ரத்த தானம் வழங்கினர். இங்குள்ள நாடியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வள்ளலார் முதியோர் இல்லத்திலுள்ள பெரியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
விழாவுக்கு பட்டுக்கோட்டை நகர விஜய் மக்கள் இயக்கத் தலைவர் ஆதி.ராஜாராம் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்டத் தலைவர் இரா.விஜய் சரவணன், நிர்வாகிகள் சி.மதன், ராகுல் விக்கி, சதீஷ்கண்ணா, வெங்கடேசன், பிரபு விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகரச் செயலர் சூரா.மணி வரவேற்றார். துணைச் செயலர் எஸ்.சம்பத் நன்றி கூறினார்.