பாபநாசம் பேரூராட்சியில் வடிகால் வாய்க்கால்களைதூர்வார பாஜக வலியுறுத்தல்
பாபநாசம் பேரூராட்சியிலுள்ள வடிகால் வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும் என்று பாரதியஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
பாபநாசம் ஒன்றிய நகர பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் வங்காரம்பேட்டை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் கோட்ட இணை பொறுப்பாளர் உமாதேவி தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் வாசுதேவன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஆரோக்யசாமி, மகாசக்தி கேந்திர பொறுப்பாளர் ராஜகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், பத்மநாபன், முன்னாள் ஒன்றிய தலைவர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் பாபநாசம் பேரூராட்சிக்குள்பட்ட 15 வார்டுகளிலும் உள்ள வடிகால்களை தூர்வார வேண்டும், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவில் நகர பொது செயலாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.