கும்பகோணம் அருகேயுள்ள கல்லூர் கிராமத்தில் வரும் 17ஆம் தேதி மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கும்பகோணம் வட்டாட்சியர் மாணிக்கராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கும்பகோணம் வட்டம், கல்லூர் கிராமத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முகாமில் வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர் உள்பட பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.
எனவே, இந்த பகுதி தொடர்புடைய கிராம மக்கள் ஒரே நாளில் முடிவு செய்யக் கூடிய சாதிசான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, பிறப்பு இறப்பு சான்று, முதல் பட்டதாரி சான்று போன்ற சான்றுகளுக்கு உரிய படிவத்தில் உரிய ஆதார ஆவணங்கள் இணைத்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனு செய்து சான்றுகளை பெற்று பயனடையலாம் என கேட்டு கொண்டுள்ளார்.