கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலை அடுத்த நாலூரில் வேலை உறுதி திட்டப் பணியில் இருந்த பெண் மயங்கி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இஞ்சிக்கொல்லை ஊராட்சி நாலூர் பெருமாள்கோயில் தெருவைச் சேர்ந்தவர் வில்வநாதன் மனைவி ஜோதி (50).
இவர் செவ்வாய்க்கிழமை நாலூரில் 100 நாள் வேலை திட்டத்தில் சாலையோரம் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஜோதி திடீரென மயங்கி விழுந்து அதே இடத்தில் இறந்தார். இதையடுத்து நாச்சியார்கோவில் போலீஸார், ஜோதியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.