நதிகளைக் காப்போம் என்ற பெயரில் பிரச்னைகளை திசை திருப்பும் தவறான பிரசாரத்தை கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் தாளாண்மை உழவர் இயக்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நதிகளைக் காப்போம் என்ற பெயரில் பிரச்னைகளை திசை திருப்பும் தவறான பிரசாரத்தை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்குத் தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் கோ. திருநாவுக்கரசு தலைமை வகித்தார். தமிழர் தேசிய முன்னணியின் பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்டச் செயலர் இரா. அருணாச்சலம், தமிழ் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலர் நா. வைகறை, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோ. ஜெயசங்கர், தமிழ்நாடு இளைஞர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்சோரி, தமிழர் நல பேரியக்கப் பொதுச் செயலர் பழ. திருமுருகன், மாணவர் பிரதிநிதிகள் பிரபாகரன், ஜான் வின்சென்ட், சீமான் இளையராஜா, அரவிந்த் ராஜ், ஏஐடியுசி துரை. மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.