தஞ்சாவூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பலத்தக் காயமடைந்த நபர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள அன்பில் சங்கரராஜபுரத்தை சேர்ந்தவர் என். ராஜேந்திரன் (49). இவர் மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூருக்கு உறவினர் வீட்டுக்கு சனிக்கிழமை (ஏப்.14) வந்து கொண்டிருந்தார். தஞ்சாவூர் அருகே மாவட்ட ஆட்சியரகப் பகுதியில் வந்த இவர் மீது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த ராஜேந்திரன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் விசாரித்தனர்.