தஞ்சாவூர்
ஒரத்தநாட்டில் நாளை மின்நுகர்வோர் கூட்டம்
ஒரத்தநாடு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.
ஒரத்தநாடு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.
இதில், ஒரத்தநாடு, ஊரணிபுரம், திருவோணம், வடசேரி, பாப்பாநாடு, உறந்தைராயன்குடிக்காடு ஆகிய பிரிவு அலுவலங்களை சேர்ந்த பகுதிகளில் வசிக்கும் மின்நுகர்வோர் கலந்துக்கொண்டு மின் விநியோகத்தில் உள்ள குறைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.