தஞ்சாவூர்
கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
பாபநாசம் அருகே கட்டட கட்டுமானப் பணியின்போது மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
பாபநாசம் அருகே கட்டட கட்டுமானப் பணியின்போது மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
திருவையாறு வட்டம், வீரசிங்கம்பேட்டை கிராமம், மேலத்தெருவை சேர்ந்த மணியன் மகன் முருகானந்தம் (32). கட்டட தொழிலாளி. முருகானந்தம் திங்கள்கிழமை தளவாய்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் ஒரு கட்டட கட்டுமான பணியில் மாடியில் நின்று வேலை செய்து கொண்டிருந்தாராம்.
அப்போது, தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த முருகானந்தத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே முருகானந்தம் உயிரிழந்தார்.சம்பவம் குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.