பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைக்கான லட்சியத்தை உருவாக்கும் புத்தாக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், கல்லூரியின் என்எஸ்எஸ், ரோட்டராக்ட், என்சிசி, ஜேசீஸ், ஜேஆர்சி, லியோ ஆகிய சங்கங்களைச் சேர்ந்த 120 மாணவர்களுக்கு ஜேசீஐ அமைப்பின் வட்டார நிகழ்ச்சி இயக்குநர் செல்வக்குமார் பயிற்சியளித்தார். முகாமுக்கு கல்லூரி முதல்வர் வீ.முத்துவேலு தலைமை வகித்தார். ஜேசிஐ பட்டுக்கோட்டை தலைவர் வினோத் பயிற்சியாளரை அறிமுகம் செய்து வைத்தார். என்எஸ்எஸ் அலுவலர் எஸ். அருள்நெல்சன், என்சிசி அலுவலர் எஸ்.சிவக்குமார், ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் வி.விஜய்ராயன், ஜேஆர்சி ஒருங்கிணைப்பாளர் சி.கைலாசபதி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
ஜேசீஸ் சங்க ஒருங்கிணைப்பாளர் வி.ராஜன் வரவேற்றார். லியோ சங்க ஒருங்கிணைப்பாளர் கே.மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினார்.