கும்பகோணம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிகழாண்டிற்கான பருத்தி மறைமுக ஏலம் புதன்கிழமை தொடங்கியது.
இதில் கடலங்குடி, பூந்தோட்டம், ஆதனூர், திருவிடைமருதூர், சேங்கனூர், மகாஜனகுடி, அகராத்தூரை சேர்ந்த விவசாயிகள் 90 குவிண்டால் எடையுள்ள பருத்தியை மறைமுக ஏலத்துக்கு கொண்டு வந்தனர். விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை சேலம், கும்பகோணம், செம்பனார்கோவில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த பருத்தி வியாபாரிகள், ஏலத்தில் எடுத்தனர் வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு வந்த பருத்திக்கு விலை நிர்ணயித்து ஏலப்பெட்டியில் போட்டனர்.
இதில் ஒரு குவிண்டாலுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 5,100-ம், சராசரி விலையாக ரூ. 4,850, குறைந்தபட்ச விலையாக ரூ 4 ,679 ம் விலை முடிவானது.