விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட மூத்தக் குடிமக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இப்பேரவையின் பொதுக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விவசாய சங்கத் தலைவர் அய்யாகண்ணுவை தாக்கியவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தந்தை பெரியாரை அவமானப்படுத்துவோரையும், அவரது சிலையைச் சேதப்படுத்துவோரையும் வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழக அரசுச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத் தலைவர் ஆதி. நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களின் துணை தலைவர் மா. உலகநாதன் பேசினார்.
துணைத் தலைவர்கள் வி.எஸ். கமலா, திருமலை, செயலர் மு. செல்வராசு, பொருளாளர் இரா. செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.