கும்பகோணத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலக்கியப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் ஆகிய போட்டிகளில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கட்டுரைப் போட்டியை மாவட்டச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம் தொடங்கி வைத்தார். இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் சரவணன், ராஜா, துரைமுருகன், பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் பேச்சு, கவிதை ஒப்புவித்தல் போட்டியை தொடங்கி வைத்தனர். தலைமை சொற்பொழிவாளர் தேவபாலன், பள்ளி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர்.
இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சேகர், நகர, ஒன்றியச் செயலாளர்கள் பரிசுகள் வழங்கினர். முன்னதாக, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். முடிவில், நகர இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.