தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் வெ. செந்தமிழ்ச்செல்வி தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரியில் வியாழக்கிழமை (நவ.22), வெள்ளிக்கிழமை (நவ.23) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது.
இத்தேர்வுகள் நடைபெறும் தேதி www.rsgc.ac.in என்ற கல்லூரி வலைதளத்திலும், அறிவிப்புப் பலகையிலும் தெரிவிக்கப்படும். மேலும், நவ. 26-ம் தேதி முதல் ஏற்கெனவே அறிவித்தபடி அந்தந்த கால அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும்.