தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்துக்கு உள்பட்ட பாப்பாநாடு அருகேயுள்ள தெற்குக்கோட்டை கிராமத்தில் சாலையில் விழுந்த பெரு மரத்தை அகற்ற முடியாத நிலை உள்ளதால் 6 நாட்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரத்தநாடு - பட்டுக்கோட்டை வழித்தடத்தில் உள்ள இக்கிராமம் பின்னையூர் - ஏனாதிக்குச் செல்வதற்கு முதன்மையான சாலையாக உள்ளது. எனவே, இச்சாலையில் நாள்தோறும் ஏராளமானோர் கடந்து செல்கின்றனர்.
இந்நிலையில், புயலால் அப்பகுதியில் ஏராளமான மரங்கள் சாலையில் விழுந்தன. இவற்றை கிராம மக்கள் அகற்றினர். ஆனால், பெருமரத்தை அகற்ற முடியவில்லை. அரசுத் தரப்பில் இருந்து யாரும் வராததால் தொடர்ந்து இச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இச்சாலையில் இயக்கப்படும் சிற்றுந்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.